Breaking News
தமிழக மாணவனுக்கு கண்டுபிடிப்புக்கான தங்க பதக்கம்; புதுடெல்லியில் ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லியில் கல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு மற்றும் இசை ஆகிய துறைகளில் அளப்பரிய சாதனை படைத்த 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேசிய குழந்தைகள் விருது 2017 என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆகாஷ் மனோஜ் என்ற மாணவனுக்கு கண்டுபிடிப்புக்கான தங்க பதக்கம் வழங்கப்பட்டது.  இதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.  அதனுடன் ரூ.20 ஆயிரம் பரிசு தொகை, ஒரு சான்றிதழ் ஆகியவையும் அவருக்கு வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் மனோஜ் உள்பட 16 குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டது.  மனோஜ் தவிர்த்த மற்ற 15 பேருக்கு வெள்ளி பதக்கம், ரூ.10 ஆயிரம் பரிசு தொகை மற்றும் ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டது.  அவர்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்த நடிகர் ஜெய்ரா வாசிம் (வயது 17) அடங்குவார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.