Breaking News
பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தெலுங்கு நடிகர் வெங்கட பிரசாத் கைது

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் கதாநாயகன் பிரபாசின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வெங்கட பிரசாத். இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு மல்டி பிளக்ஸ் தியேட்டரில் மானேஜராக இருக்கிறார். அதே தியேட்டரில் வேலை செய்யும் ஒரு பெண், வெங்கட பிரசாத் தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:–

‘‘வெங்கட பிரசாத் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவருடன் நெருங்கி பழகியதில் இரண்டு தடவை நான் கர்ப்பமானேன். ஆனால் கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்து விட்டார். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினேன். அதற்கு அவர் மறுத்ததுடன் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.’’

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் வெங்கட பிரசாத்தை கைது செய்தனர். வெங்கட பிரசாத் பல பெண்களிடம் நெருங்கி பழகியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.