Breaking News
இந்தியா- இலங்கை இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் போடுவதில் தாமதம்
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியா, மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 9 போட்டிகளில் (3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி) வெற்றி பெற்று இலங்கையை புரட்டியெடுத்தது.
இப்போது சொந்த மண்ணில் விளையாட இருப்பதால் இந்திய அணியை அசைத்து பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி கம்பீரமாக வீறுநடை போடும் இந்திய அணி, அதை இந்த தொடரிலும் நீட்டிப்பதில் தீவிரமாக இருக்கிறது.
இந்த நிலையில், மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதமாக உள்ளது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.