Breaking News
சொகுசு கார் பதிவு விவகாரம் : அமலாபால் மீது வழக்கு

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில், நடிகரும் எம்பியுமான சுரேஷ் கோபி ஆகியோர் புதுச்சேரியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து தங்களது சொகுசு கார்களை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக போக்குவரத்து துறைக்கு அமலாபால் அனுப்பிய ஆவணங்கள் போலி என்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதனால் வரி செலுத்த வேண்டுமென்று நடிகை அமலாபாலுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கொச்சி குற்றப்பிரிவு ஐஜி ஸ்ரீஜித்துக்கு கேரள போக்குவரத்து ஆணையாளர் அனில்காந்த் உத்தரவிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.