Breaking News
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி போராடி தோல்வியில் இருந்து தப்பி ‘டிரா’ செய்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.

இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம்
இந்தியா,

முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரகானே, ரோகித் ஷர்மா, ரிதிமான் சகா(கீப்பர்), ரவிசந்திரன் அஷ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா,

இலங்கை,

சமரவிக்ரமா, டிமுத் கருணரத்னே, திரிமண்ணே, மேத்யூஸ், சண்டிமால்(கேப்டன்), நிரோஷன் டிக்வெல்லா(கீப்பர்), டசுன் ஷனகா, டில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், லஹிரு கமேஜ்,

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.