Breaking News
கேரளா வெள்ள சேதத்துக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் உதவி சிவகார்த்திகேயனும் 10 லட்சம் கொடுத்தார்

கேரளாவில், வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 10–க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 324 பேர் உயிரிழந்தாகவும், 1500க்கும் அதிகமான முகாம்களில் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும் உங்களுடைய உதவி பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கையை மீண்டும் உருவாக்க உதவியாக இருக்கும், தாரளமாக உதவி செய்யுங்கள். முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி உதவலாம் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

கேரள மழை–வெள்ள பாதிப்புக்கு திரையுலகை சேர்ந்த நடிகர்–நடிகைகள் தாராளமாக உதவி வருகிறார்கள். முதல்–மந்திரி பினராயி விஜயன் பெயருக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறார்கள்.

கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பங்குக்கு ரூ25 லட்சம் அறிவித்துள்ளார்.

அதேபோல் நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் அறிவித்துள்ளார். முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். விஷால் மற்றும் சித்தார்த் ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி அளித்துள்ளது.

இந்தநிலையில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் உதவி தொகையை அனுப்பியிருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.