Breaking News
இந்திய சிறையில் வெளிச்சம் இருக்காது ; மல்லையாவுக்கான சிறை அறையின் வீடியோ லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்

மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில், அவர் அடைக்கப்பட உள்ள சிறையின் வீடியோ இங்கிலாந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கிகளின் சார்பாக லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொழிலதிபர் விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்ட பிறகு அவர் அடைக்கப்படவுள்ள மும்பை சிறையின் வீடியோவை லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் இருந்து பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து வங்கிகளின் சார்பாக லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது மல்லையா நாடு கடத்தப்பட்டால் மும்பை சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய சிறையில் போதிய வெளிச்சம் உள்ளிட்ட வசதிகள் இருக்காது என்று மல்லையா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து சிறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்த வீடியோவை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. அதில் 12ம் எண் அறையில் போதிய சூரிய வெளிச்சம் வருவது காட்டப்பட்டுள்ளது. மேலும் தனியாக கழிவறை, தொலைக்காட்சி பெட்டி, சுத்தமான படுக்கை, தலையணை போன்ற வசதிகள் மல்லையாவுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.