Breaking News
சீனாவில் ஓட்டலில் திடீர் தீ விபத்து; 18 பேர் பலி

சீனாவின் வடகிழக்கே ஹார்பின் என்ற நகரில் ஓட்டல் ஒன்று அமைந்து உள்ளது. இதில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

சீனாவில் தீ பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால் ஓட்டல்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் நடைபெறுவதுண்டு.

கடந்த ஏப்ரல் 18ல் நாட்டின் தெற்கே கரோக்கே ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.

இதேபோன்று நவம்பரில் பெய்ஜிங் நகரில் தங்கும் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர். கடந்த 2015ம் ஆண்டு மே மாதத்தில் ஓய்வு இல்லம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 38 பேர் பலியாகினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.