Breaking News
டில்லியில் ராகுல் தலைமையில் கண்டன பேரணி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பந்த் காரணமாக பல மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்., தலைவர் ராகுல் தலைமையில், டில்லியில் ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை கண்டன பேரணி நடத்தப்பட்டது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள், காங்., மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வை எதிர்த்து முழக்கம் எழுப்பப்பட்டது. விலை உயர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.