Breaking News
புல்லட் நாகராஜ் திருச்சி சிறையில் அடைப்பு

போலீஸ் அதிகாரிகளுக்கு வாட் ஆப்பில் மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ரவுடி புல்லட் நாகராஜூக்கு 15 நாள் கோர்ட் காவலி்ல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தேனியைச் சேர்ந்த ரவுடி புல்லாட் நாகராஜ், மதுரை சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவுக்கு வாட்ஸ் ஆப்பில் மிரட்டல் விடுத்த வழக்கில் மதுரை கரிமேடு தனிப்படை போலீசார் புல்லட் நாகராஜை தேடி வந்நதனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவர் கைது செய்யப்பட்டர். அவர் மீது பெரியகுளம் போலீசர் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட புல்லட் நாகராஜை 15 நாள் கோர்ட் காவலி்ல் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து புல்லட் நாகராஜ், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.