Breaking News
ஐதராபாத் வெடிகுண்டு வழக்கு: 2 பேருக்கு தூக்கு

ஐதராபாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து, கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2007 ம் ஆண்டு, ஆகஸ்ட் 25ம் தேதி ஐதராபாத்தின் கோகுல்சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி சினிமா தியேட்டரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 44 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர்.

இது தொடர்பாக இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த ஐதராபாத் இரண்டாவது கூடுதல் மெட்ரோபாலிடன் செசன்ஸ் கோர்ட், 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது; 3 பேரை விடுதலை செய்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் என தீர்ப்பளித்த அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்ரி ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு என்.ஐ.ஏ., கோர்ட் உத்தரவிட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.