Breaking News
இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது

இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் இன்று காலை 9.11 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் கின்னாரின் வடகிழக்கே 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. கின்னார் உள்பட பல்வேறு மலை பகுதிகள் தீவிர நிலநடுக்க மண்டல பகுதியில் வருகிறது. இந்த பகுதிகளில் லேசான நடுக்கங்கள் ஏற்படுவது என்பது தொடர்ச்சியான ஒன்றாக உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.