Breaking News
மேற்கிந்திய தீவுகள் அணியை 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!

முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என ஒருநாள் தொடரில் சமநிலையில் இருக்கின்றன. முதல் போட்டியை இந்தியா வென்றது. இரண்டாம் போட்டி டிரா ஆனது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்று இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் 4 வது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான சூழலில் இந்தியா இருந்தது. 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது.

இந்தநிலையில் களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 36.2 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மேற்கு இந்திய தீவுகள் அணியை 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.