Breaking News
சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

கடந்த வாரத்தில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்து வந்த போதும், தலைநகர் சென்னையில் மழை பெய்யாமல் வெயில் வெளுத்து வாங்கி கொண்டு இருந்தது. அதேபோல், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை துவங்குவதும் தொடர்ந்து தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென மழை பெய்யத்துவங்கியது. எழும்பூர், புரசைவாக்கம், செண்ட்ரல், கிண்டி, ஈக்காட்டு தாங்கல், வேளச்சேரி, தரமணி உள்பட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.