Breaking News
பிரதமரின் வெளிநாட்டு சுற்று பயணங்கள் கறுப்பு பணம் இந்தியாவுக்கு வர உதவவில்லை; காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மேலவைக்கான எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் குலாம் நபி ஆசாத். இவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, ஒரு பிரதம மந்திரி கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டு சுற்று பயணங்கள் மேற்கொள்வதில்லை. ஆனால் தனது நாட்டை அடையாளப்படுத்துவதற்காக அவர் சுற்று பயணம் செய்கிறார். அதனால் தேவையான நேரத்தில் நாட்டுக்கு பலன் கிடைக்க வேண்டும்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் பலரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான போதிய தாக்கத்தினை பிரதமரால் ஏற்படுத்த முடியவில்லை.

கடந்த மக்களவை தேர்தலில் கறுப்பு பணம் இந்தியா கொண்டு வரப்படும் என அவர் வாக்குறுதி கொடுத்தும் அது நடைபெறவில்லை. வரி செலுத்துவோரின் பணம் எடுத்து செல்லப்படுவதனை தடுத்து நிறுத்த அவரால் முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.