Breaking News
‘நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன்’: சிஎஸ்கேவில் மீண்டும் இடம்பெற்றதால் ஹர்பஜன் சிங் உற்சாகம்

2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றது குறித்து நான் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்று தமிழில் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் பெரும்பாலான சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்கு வந்ததில் இருந்தே தமிழில் அவ்வப்போது ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை ஹர்பஜன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த சீசனில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், போட்டி முடிந்த பின்பும் சக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் ஹர்பஜன் தமிழிலும், ஆங்கிலத்திலும் ட்வீட் செய்து மகிழ்வித்தார்.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங் மீண்டும் இடம் பெற்றுள்ளார். இது குறித்து ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

”தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன். திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் @ChennaiIPL.சும்மா நெருப்பா,சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா! வேர்ல்டு மொத்தமும் அரளவுடணும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெரளவுடணும் பந்தை. சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.