Breaking News
போர் இழப்புகளில் இருந்து மீண்டு வர ரஷியா பல தலைமுறைகள் எடுக்கும்- உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் சமரசம் ஏற்படாத நிலையில் ரஷியா 24-வது நாட்களாக தனது தாக்குதலை தொடர்ந்துள்ளது. இருந்தாலும் முக்கியமான நகரங்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவிகளை பெற்று உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஷியாவுக்கு இழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பொருளாதாரத்தடைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், போரினால் ஏற்படும் இழப்பு ரஷியாவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சீனாவிடம் இருந்து ஆயுத உதவி பெற வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உலக நாடுகளின் ஆதரவுகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது. இல்லையெனில் போரின்போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து ரஷியா மீண்டு வர பல தலைமுறைகள் எடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.