Breaking News
இலங்கையிலிருந்து வெளியேறி அகதிகளாக தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது!
கொழும்பு,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இலங்கையிலிருந்து தமிழர்கள் அவ்வப்போது, படகு மூலம் தப்பி தமிழகத்துக்கு அகதிகளாக வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் இருந்து தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.மன்னார் கடற்பரப்பில் 12 பேரையும், அதனை தொடர்ந்து மீதி இருவரையும் இலங்கை கடற்படை கைது செய்தது.
இலங்கை மன்னாரில் இருந்து தமிழகம் வர முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 14 பேரும் கைது செய்யப்பட்டு தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.