Breaking News
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சி- முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை, கோவை, வ.உ.சி. மைதானத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை’ அகழ்வு ஆராய்ச்சி கண்காட்சி இன்று தொடங்கி வைத்தார் . கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவைக்கு வந்தார். தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார் .கீழடி, கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.- அவினாசியில் நடைபெறும் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார் கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கார் மூலமாக ஊட்டிக்கு புறப்படுகிறார். ஊட்டி செல்லும் மு.க.ஸ்டாலின் நாளை காலை தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். 21-ந் தேதி ஊட்டி 200-ம் ஆண்டு விழா மற்றும் தமிழக அரசின் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.