Breaking News
பருத்தி மற்றும் நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை, பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஜவுளி துறை மந்திரியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஜவுளி துறை மந்திரி பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அப்போது, பருத்தி மற்றும் நூல் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகளையும் விளக்கியுள்ளார். நேற்று மேற்கு மாவட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பருத்தி விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று தொலைபேசி வாயிலாக மத்திய மந்திரியை தொடர்புகொண்டு, முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.