Breaking News

 

குன்றத்தூரில் 400 கிலோ குட்கா , 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது 2 லோடு வேன்களை சோதனை செய்த போது , அந்த வேன்களில் 400 கிலோ குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே, போலீசார் குட்காவை கடத்திய தூத்துக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 24) அவரது நண்பர் முத்துகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரித்த போது, பெங்களூரிலிருந்து குட்காவை விலைக்கு வாங்கி வந்து , குன்றத்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளில் விற்பதாக தெரிவித்தனர். இதற்காக குன்றத்தூர் சமயபுரம் பகுதியில் ஒரு வீடு வாடகை எடுத்து , அங்கு குட்காவை பதுக்கி வைத்து , விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதுபற்றி குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் ஸ்ரீபெருமந்தூர் கோர்ட்பில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் 400 கிலோ குட்கா, 2 லோடு வேன்களை பறிமுதல் செய்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.