Breaking News

 

 

மதுரவாயல் அருகே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி வீட்டில் கோ பேக் மோடி என்ற வாசகம் பொறித்த 370 பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

.இன்று பாரத பிரதமர் மோடி சென்னை ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கவும், சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலைய முனையத்தை திறக்கவும் , பல்லாவரத்தில் பல்வேறு ரயில் சேவைகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க இன்று வருகை தருகிறார்.

சென்னைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைத் தரும் பாரத பிரதமர் மோடிக்கு , காங்கிரஸ் கட்சி சார்பில் , கோ பேக் மோடி என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கருப்பு பலூன்கள் பறக்க விட திட்டமிட்டனர்.

 

இதனை நோட்டமிட்ட சென்னை மாநகர போலீசார் , மதுரவாயல் அடுத்த , நூம்பல் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி.பிரிவு தலைவர் ரஞ்சன் வீட்டில் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் கோ பேக் மோடி என்ற வாசகம் பொறிக்கப்பட்ட , 370 கருப்பு பலூன்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.