Breaking News

வளசரவாக்கத்தில் அம்பேத்கர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் பென்ஜமின் மாலை அணிவித்தார் வளசரவாக்கத்தில் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான பா.பென்ஜமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி அ.தி.மு.க.எதிர்கட்சி துணைத் தலைவரும், 145 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.சத்திய நாதன் , மாவட்ட துணைச் செயலாளர் கா.சு.ஜனார்த்தனம் , தெற்கு பகுதி செயலாளர் கே.தாமோதரன், வட்டச் செயலாளர்கள் வி காசி, கே.பி.வேணுகோபால், வி.மகேந்திரமணி, ராஜகோபால், ராஜ்குமார் பச்சையப்பன், மீனாட்சி சுந்தரம் , எம். ஆனந்தன், டி.பி.அன்பரசு , இ.சி.பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதே போல வளசரவாக்கம் டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றத் தலைவர் ஜி.ரமேஷ் , செயலாளர் கோ.தமிழரசு , பொருளாளர் எஸ்.சேகர், எம்.ஆனந்தன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நெற்குன்றம் 145 வார்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு , சென்னை மாநகராட்சி எதிர்கட்சி துணைத் தலைவரும் , மாமன்ற உறுப்பினருமான டி.சத்தியநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் அன்னதானம் , இலவச சேலைகள் வழங்கினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.