தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடிய ரவுடி கைது – இருசக்கர வாகனம் மீட்பு

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடிய ரவுடி கைது – இருசக்கர வாகனம் மீட்பு

தூத்துக்குடி சத்திரம் தெருவை சேர்ந்த அபுபக்கர் மகன் அப்துல் முஜீப் (53) என்பவர் கடந்த  20.11.2023 அன்று ஒரு தனியார் விடுதி அருகே நிறுத்திவிட்டு பின்னர் வந்து பார்க்கும் போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து அபுபக்கர் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கீழமுடிமண் பங்களா தெருவை சேர்ந்த அந்தோணி மகன் ஆரோக்கிய ஜோதி (41) என்பவர் மேற்படி அபுபக்கரின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கியப்பன் மற்றும் போலீசார் ஆரோக்கிய ஜோதியை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 60,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆரோக்கிய ஜோதி மீது ஏற்கனவே ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 3 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும் என 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )