திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா வைத்திருந்தவர் கைது – 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா வைத்திருந்தவர் கைது – 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் மற்றும் போலீசார் நேற்று (14.02.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் மதுரை மாவட்டம் ஹீரா நகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் மூர்த்தி (38) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார் மூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட  மூர்த்தி மீது ஏற்கனவே விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், மதுரை திடீர்நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )