திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 192- வது ஆண்டு அவதார தின விழா

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 192- வது ஆண்டு அவதார தின விழா

அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதி கடற்கரையில் சூரிய உதயத்தை வழிபட பல்லாயிரம்க்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ளது அய்யா வைகுண்டர் அவதாரபதி.
இங்கு ஆண்டு தோறும் அய்யா வைகுண்டரின் அவதார தின வழிபாடு மாசி மாதம் 20-ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 192வது ஆண்டு அவதார தினவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் அய்யா வைகுண்டருக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல் உள்ளிட்ட பணிவிடைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலையில் சூரிய உதயத்தின் போது பள்ளியறையில் உள்ள பனிவிடை பொருட்களுக்கு கடல் பதமிடுதல் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் அய்யா சிவ சிவ சிவ சிவ.. ஹர ஹர ஹர ஹர என்ற கோசத்துடன் இன்று உதயமாக கூடிய சூரிய உதயத்தை அய்யா வைகுண்டர் அவதரித்ததாக கருதி மலர் தூவி வரவேற்றார். இதனை தொடர்ந்து கோவில் நடைதிறக்கப்பட்டு அவதார விழா பணிவிடை மற்றும் உகம்பெருக்குதல் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார், வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் துணைத் தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை தலைவர் பால்சாமி, அவதார பதி சட்ட ஆலோசகர் சந்திரசேகர், நிர்வாகிகள் இணை தலைவர் ராஜ் துரை, இணை தலைவர்கள் விஜயகுமார், செல்வின், இணை செயலாளர்கள் தங்க கிருஷ்ணன், சுதேஷன், வரதராஜ பெருமாள், ராதாகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆதிநாராயணன், இளங்கோ, ராமமூர்த்தி, பாலகிருஷ்ணன்,
ஏற்பாடுகளை அய்யா வழி அகில இந்திய திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்து வருகின்றனர்.

செய்தி – சதீஷ் 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )