
தூத்துக்குடி 2-ம் கேட் அருகே வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த 30 வழக்கில் தொடர்புடைய ரவுடி கைது
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீஸார் நேற்று ( 04.03.2024 ) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி 2ஆம் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் கைது செய்யப்பட்டார். பகுதியைச் சேர்ந்த ரோசாரி மகன் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (27) என்பதும், அவர் அப்பகுதியில் இருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 19 வழக்குகள், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 9 வழக்குகள், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என 30 வழக்குகள் வழங்கப்பட்டுள்ளன.