கோவில்பட்டி அருகே லாரி மீது வேன் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு – 11 பேர் காயம்

கோவில்பட்டி அருகே லாரி மீது வேன் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு – 11 பேர் காயம்

திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன்(70). இவர் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சுவாமி கும்பிட நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு வேனில் கிளம்பியுள்ளனர். வேனை டிரைவர் மாரியப்பன் ஓட்டிச் சென்றுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கோவிலில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு மாலையில் அறந்தாங்கியில் இருந்து திருநெல்வேலிக்கு கிளம்பியுள்ளனர். வேனில் டிரைவர் உள்பட 12 பேர் இருந்துள்ளனர்.

இன்று நள்ளிரவில் வேன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தளவாய்புரம் பகுதியில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்ற போது, எதிர்பாராதமாக வேன் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே வீரப்பன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவர் உள்பட 11பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கயத்தார் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த வீரப்பன் உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – முத்துக்குமார்


 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )