தூத்துக்குடி பேரூரணி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி பேரூரணி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிராமம் அருகே நீராவிக் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரது குழந்தைகள் சந்தியா (வயது 13), கிருஷ்ணவேணி (வயது 10) மற்றும் இசக்கிராஜா (வயது 8) ஆகிய மூவரும் நேற்று 09.03.2024 மாலை தனது உறவினருடன் பேரூரணி கிராமத்தில் உள்ள நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )