தூத்துக்குடி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும், உயிர்நீத்ததையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர். அதன் நிறைவாக இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலங்களிலும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடியில் உள்ள லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தை ஆன்றனி புருனோ தலைமையில், அருள்தந்தை ஸ்டார்வின் முன்னிலையில். சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதுபோல் தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம், அந்தோணியார் கோவில் ஆலயம், இன்னாசியர் ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )