திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா 84வது அவ‌தார பெருமங்கல விழா – வேள்வி பூஜை

திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா 84வது அவ‌தார பெருமங்கல விழா – வேள்வி பூஜை

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்களின் 84வது அவ‌தார பெருமங்கல விழாவை கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் 84வது அவ‌தார பெருமங்கல விழா நடைபெற்றது. இயற்கை பேரிடர் தவிர்க்கவும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ, மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து கல்வி அறிவு சிறக்கவும், தொழில்வளம் சிறக்கவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
வேள்வி பூஜையை ஆதிபராசக்தி சித்தர்பீட மத்திய வேள்விக்குழு தலைவர் சக்தி.பா. கோபு தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.

ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் சக்தி கொடியை ஏற்றினார். தொடர்ந்து  அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

விழாவில், ஆன்மிக இயக்க துணைத் தலைவர் பண்டார முருகன், பொருளாளர் கண்ணன், வேள்விக்குழு கிருஷ்ணநீலா, பிரச்சாரம் முத்தையா, இளைஞர் அணி செல்லத்துரை, திருச்சி மாவட்ட வேள்வி பொறுப்பாளர் முத்துக்கண்ணு, சித்தமருத்துவர் வேம்பு கிருஷ்ணன், வட்டத் தலைவர்கள் செல்வம், அழகர்சாமி, தினேஷ், சக்திபீட இளைஞர் பொறுப்பாளர்கள் திருஞானம், அனிதா, அகிலா, புவனேஸ்வரி, ஜெயராமன், மணி உட்பட பலர் கலந்து கொண்டன. ஏற்பாடுகளை சக்திபீட துணைத் தலைவர் திருஞானம் செய்திருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )