
தூத்துக்குடி மாவட்டத்தில் பதட்டமான மற்றும் பாதிக்கப்படக் கூடியதாக 288 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தகவல்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களின் ஓட்டுரிமையை நிலை நாட்டும் வகையிலும், ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாகவும் 100% வாக்களித்திட வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
36.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 அன்று பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு 19.04.2024 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 260, 2,10,578 வாக்காளர்கள், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளில் 2,82,026 வாக்காளர்கள், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளில் 2,41,620 வாக்குச்சாவடிகளில் 260, ஸ்ரீவைகுண்டம் 281 தொகுதி வாக்காளர்கள் 2 வாக்குச்சாவடிகளில் 2 ,45,340 வாக்காளர்கள், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளில் 2,54,848 வாக்காளர்கள் என மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகளில் 14,58,430 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
மேற்கண்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 13.04.2024 முதல் பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நாளது முடிய தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 14,58,430 வாக்காளர்களில் 91.53 சதவீகிதம் அதாவது 13,34,935 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்கப்பெறாத நபர்கள் வாக்களித்திட ஏதுவாக சம்பந்தப்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பூத் சிலிப் விநியோகம் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் குறிப்பிட்டுள்ள பூத் சிலிப்பினை மட்டும் வைத்து வாக்களிக்க இயலாது, வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 மாற்று ஆவணங்களை வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை கைவசம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாமல் இருந்தால் வாக்களிக்க இயலும்.
தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 1,624 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதியான குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு உதவிபுரிய பணியாளர்கள் மற்றும் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ளதால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களித்த பந்தல் வசதி, பொது சுகாதாரத்துறை மூலம் உப்புக்கரைசல் பொடி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் பதட்டமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 288 வாக்குச்சாவடிகளில் 265 மையங்களுக்கு நியமனம் செய்யப்பட்டு வாக்குப்பதிவைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் 70, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 187 ஆக மொத்தம் 1057 வாக்குச்சாவடிகளில் (65% வாக்குச்சாவடிகளில்) வெப்கேமிரா வசதி ஏற்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு முழுவதும் பதிவு செய்து, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 19.04.2024 அன்று நடைபெறும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தையும் மாவட்ட அளவில் கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய பாதுகாப்பு காவல்படையினர் மற்றும் காவல்துறையினர் வாயிலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு செய்திட வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்து வாக்களித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் வாக்கு மையமான வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வேட்பாளர்கள் / பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களின் ஓட்டுரிமையை நிலை நாட்டும் வகையிலும், ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாகவும் 100% வாக்களித்திட வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.