
தூத்துக்குடியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்
தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திரேஸ்புரம் பகுதி மேட்டுபட்டியில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீர், எலுமிச்சை ஜூஸ், ரஸ்னா, உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை, அண்ணாசிபழம், போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் கூறுகையில் தண்ணீர் பந்தல் திறப்பது பொிய விஷயம் அல்ல கோடை காலம் முடியும் வரை பொதுமக்களின் நலன் கருதி குளிர்ந்த நீர் குளிர்பானங்கள் வழங்கி தினசாி அதை முறையாக பராமாிக்க வேண்டும் கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணா்வோடு பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளரும் மாநகராட்சி மண்டலத் தலைவருமான நிர்மல்ராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர் பவாணி மார்ஷல், வட்டச்செயலாளர் கருப்பசாமி, வட்டப்பிரதிநிதி மார்ஷல், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்