
தூத்துக்குடி அருகே திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே பட்டாண்டிவிளை, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் மனைவி பேச்சியம்மாள் (18). இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பேச்சியம்மாள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பாராம். இதனை அவரது ஸ்ரீராம் கணவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பேச்சியம்மாள் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
CATEGORIES மாவட்டம்