தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு – போராடி உடலை மீட்ட தீயணைப்புத்துறை

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு – போராடி உடலை மீட்ட தீயணைப்புத்துறை

தூத்துக்குடி மாநகரின் மத்திய பகுதியில் உள்ள சிவன் கோவில் தெப்பக்குளம். இந்த தெப்பக்குளத்தின் சுற்று சுவற்றில் அமர்ந்து சிலபேர் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடி ஜெய்லானி தெருவை சேர்ந்த அசன் அலி என்ற நல்லி என்பவர் தெப்பக்குளத்தில் தவறி விழுந்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றபோது அவர்களால் காப்பாற்ற முடியாததால் தண்ணீரில் மூழ்கினர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை தீவிரமாக தேடினர். ஆனால் உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஆழ்கடலில் முத்து எடுக்க பயன்படுத்தப்படும் ஆக்சிசன் சிலிண்டர் மூலம் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி உடலை மீட்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )