
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா
தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று தூத்துக்குடி – திருச்செந்தூர் மெயின் ரோடு சிவந்தாகுளம் அருகே நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, இளைஞர் சிறுத்தை எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் விமல் வங்காளியார் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கலைவேந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு சிறப்பு அழைப்பாளர்கள் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் விஜி , மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வகுமார், 49 ஆவது வார்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட, ஒன்றிய, நகர, முகாம், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.