
வைகாசி விசாகம்: திருச்செந்தூர்- நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு, 22.05.2024 அன்று (புதன்கிழமை) திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி,
1. ரயில் எண் 06857 திருநெல்வேலி – திருச்செந்தூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து 06.40 மணிக்குப் புறப்படும். 22.05.2024 அன்று திருச்செந்தூரை 08.15 மணிக்கு வந்தடையும்.
2. ரயில் எண். 06858 திருச்செந்தூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து காலை 09.15 மணிக்குப் புறப்படும். 22.05.2024 அன்று திருநெல்வேலியை 10.50 மணிக்கு வந்தடையும்.
3. ரயில் எண் 06859 திருநெல்வேலி – திருச்செந்தூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து 11.25 மணிக்குப் புறப்படும். 22.05.2024 அன்று மற்றும் திருச்செந்தூரை 13.00 மணிக்கு வந்தடையும்.
4. ரயில் எண். 06860 திருச்செந்தூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து 13.30 மணிக்குப் புறப்படும். 22.05.2024 அன்று திருநெல்வேலிக்கு 15.00 மணிக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாத்தான்குளத்தில் நின்று செல்லும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், காஞ்சனவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் ஹாலத், இந்த பெட்டியில் ஐந்து பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.