
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கடந்த 27.04.2024 அன்று தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மகன் ராம்தேவன் (22) என்பவரை தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட ராம்தேவன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ்
கடந்த 25.04.2024 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் ஆறுமுகநேரி எஸ்.எஸ் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (28) என்பவரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பாலாஜி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதரும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மகன் 1) ராம்தேவன் மற்றும் ஆறுமுகநேரி எஸ்.எஸ் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் 2) பாலாஜி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.