கலைஞரால் முரட்டுபக்தன் என்று பாராட்டு பெற்ற என்.பொியசாமியின் 7ம் ஆண்டு நினைவுநாள்- வரும் 26ம் தேதியன்று அனுசரிப்பு- தொண்டர்களுக்கு அழைப்பு

கலைஞரால் முரட்டுபக்தன் என்று பாராட்டு பெற்ற என்.பொியசாமியின் 7ம் ஆண்டு நினைவுநாள்- வரும் 26ம் தேதியன்று அனுசரிப்பு- தொண்டர்களுக்கு அழைப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், சிறுவயது முதல் கழகத்திற்காக உழைத்து, கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தூத்துக்குடி மாவட்டம் ஆரமப்பிக்கப்பட்ட நாள்முதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றியவரும், கலைஞரால் முரட்டுபக்தன் என்று பாராட்டு பெற்ற என்.பொியசாமியின் 7ம் ஆண்டு நினைவுநாள் வரும் 26ம் தேதியன்று காலை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அவரது திருவுருவ படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )