10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை – தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை – தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி கனம் சுரேஷ் 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 7000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

துாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் ஸ்ரீரங்கன் (50) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து கடந்த 20.08.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த கனம் நீதிபதி  சுரேஷ் இன்று (23.05-2024) குற்றவாளியான ஸ்ரீரங்கன் என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 7000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமைக் காவலர் ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )