
தூத்துக்குடி: கணவன்-மனைவி இடையே தகராறு- கணவன் தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடி தபால் தந்தி காலனி 16-வது தெருவைச் சேர்ந்தவர் பால்துரை மகன் சண்முகவேல் (38). பிளக்ஸ் போர்டு அமைக்கும் தொழில் செய்து வரும் இவர் மனைவியின் 12 பவுன் நகைகளை அடமானம் வைக்கப்போவதாக கூறி அவருக்குத் தெரியாமல் விற்று விட்டாராம். இது மனைவிக்கு தெரிய கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சண்முகவேல் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல்றிந்த சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES மாவட்டம்