மது அருந்த பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

மது அருந்த பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் நடந்த கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் I நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 09.05.2024 அன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரன்கோவில் ரயில்வே நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த ஒருவரிடம் மது அருந்த பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சங்கரன்கோவில் ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் சுரேஷ் (27) என்பவரை சங்கரன்கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் சம்பந்தப்பட்ட குற்றவாளி சுரேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மனோகரன்  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் சங்கரன்கோவில் ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் சுரேஷ் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மனோகரன் சுரேஷை  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )