தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட  தகராறில் தீக்குளித்த  மின் வாரிய ஊழியர் உயிரிழந்தார்

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த மின் வாரிய ஊழியர் உயிரிழந்தார்

தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஞானமுத்து (48). மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வாராம். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்றிரவு ஏற்பட்ட தகராறில் மணமுடைந்த ஞானமுத்து தனது உடலில் டீசல் உற்றி தீ வைத்துக்கொண்டார்

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஞானமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )