
புதுக்கோட்டை அரூகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராமலட்சுமி தலைமையில் சார்பு ஆய்வாளர் ஞானராஜன் மற்றும் போலீசார் நேற்று (31.05.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புதுக்கோட்டை சிறுபாடு ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் புதுக்கோட்டை பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர்களான ராமர் மகன் அழகுமுத்து (22) மற்றும் கருப்பசாமி மகன் பத்திரகாளிமுத்து (28) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் அழகுமுத்து மற்றும் பத்திரகாளிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.