
தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் ஆண் சடலம் – போலீசார் விசாரணை
தூத்துக்குடி மணியாச்சி அடுத்துள்ள மேலபாண்டியாபுரம் ரயில்வே கேட் பகுதி அருகேயுள்ள காட்டுப் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக மணியாச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் 10 நாட்களுக்கு மேலானதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என்று தெரியவந்துள்ளது.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES மாவட்டம்