
கலைஞர் பிறந்தநாளையொட்டி மாப்பிள்ளை யூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உணவு வழங்கினார்
தூத்துக்குடி இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும். எதிர்கால இந்தியா எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து தனது பதவிகாலத்தில் பணியாற்றிய காலத்தை இன்று வரை இளைய தலைமுறையினர் மட்டுமின்றி பலரும் போற்றும் வகையில் அவரது செயல்பாடு அமைந்தது. இதற்கு முன்னோட்டமாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஓரு கிராமத்தின் வளர்ச்சிதான் இந்த நாடு முதுகெலும்பாக திகழ்வதற்கு காரணமாக அமைகிறது. அப்படி பட்ட பகுதிகளை தான் நாம் எல்லா வகையிலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அதன் மூலம் அப்பகுதி மக்கள் எவ்வித குறைபாடுகளின்றி வாழ வேண்டும். என்று பல்வேறு கட்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
அதன் வழியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் தலைமையில், தூய்மை காவலர்கள் 100 பேருக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் உணவு வழங்கினார்.
பின் கலந்துரையாடலின் போது தூய்மை பணியை எவ்வித தொய்வின்றி நல்லமுறையில் பணியாற்றுவதை மனதார ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் பாராட்டுகிறேன் இப்போது பணியாற்றுவதை போல் எப்போதும் பணியாற்றி அனைத்து பகுதிகளிலும் முழுமையான தூய்மையை கடைபிடிக்கும் வகையில் ஓற்றுமையுடன் களப்பணியாற்றி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தூய்மை காவலர்கள் பெருமையை பெற்றுத்துரவேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் இளைஞர் அணியை சேர்ந்த நெல்சன், இருதயராஜ், குணா, பிரபாகர்,உள்பட தூய்மை காவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனா்.