
கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
மேற்படி திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதி உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு ஏற்கனவே பழுது பார்க்க அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டான்ட், மைக்செட் (ம) ஒலிப்பெருக்கி அமைத்தல், நற்கருணை பேழை பீடம் அமைத்தல், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள். சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் போன்ற கூடுதல் பணிகள் மேற்கொள்ளுவதற்கு அனுமதியளிக்கப்பட்டு, தேவலாய கட்டடம் 10 முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.10.00 இலட்சமாகவும், 15 முதல் 20 வருடம் வரை இருப்பின் ரூ.4.00 இலட்சத்திலிருந்து ரூ.15.00 இலட்சமாகவும், 20 வருடத்திற்கு மேல் இருப்பின் ரூ.6.00 இலட்சத்திலிருந்து ரூ.20.00 இலட்சமாகவும் மானியத் தொகை உயர்த்தி அரசால் வழங்கப்படுகிறது.
விண்ணப்பித்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
1. தேவாலயம் பதிவு செய்யப்பட்ட விவரம்.
2. தேவாலய கட்டிட வரைபடம் (அங்கீகரிக்கப்பட்டது).
3. தேவாலய கட்டிட ஸ்திர தன்மை சான்று .(Stability Certificate) (form A,B,C & E)
4. பொறியாளரின் திட்ட மதிப்பீட்டு அறிக்கை (Stability Certificate) (form A,B,C & E)
5. தேவலாய வங்கி கணக்கு எண் மற்றும் IFSC.
6. தேவலாய சுயாதீனம் (Independent) வகையாயிருப்பின் அதன் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற்ற சான்று.
இத்திட்டம் குறித்து நிதி உதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழு மூலம் ஸ்தல ஆய்வு செய்யப்பட்டு, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நலத்துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.
தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.