
செக் மோசடி வழக்கில் கிரானைட் கடை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை – தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடியில் காசோலை மோசடி செய்யப்பட்ட 3 வழக்குகளில் கிரானைட் கடை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு :1
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் அருண்வேல். இவர் தேவர்புரம் சாலையில் ஏ.எஸ் கிரானைட் டைல்ஸ் கடையை நடத்தி வந்துள்ளார். இவரது கடை வியாபாரத்திற்காக கே.வி.கே. நகர் பகுதியில் வசித்து வரும் சண்முகம் மகன் ராமர் என்பவரிடம் ரூ2,50,000 (இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்) கடந்த 03/04/ 2020 அன்று கடனாக பெற்றுள்ளார். பெற்றக் கடனுக்காக அருண் வேல் ரூ2,50,000-க்கான காசோலையை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என தெரியவந்துள்ளது.
இதனால், அருண் வேல் தன்னை ஏமாற்றும் நோக்கத்துடன் பணமில்லாத வங்கி காசோலையை கொடுத்ததை அறிந்த சண்முகம் மகன் ராமர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜலதி, அருண் வேலுக்கு 1 வருட கால சிறை தண்டனையும், 3,07,500 ரூபாயை 1 மாதத்தில் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.
2. இதேபோன்று மற்றொரு செக் மோசடி வழக்கு:
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் அருண்வேல். இவர் தேவர்புரம் சாலையில் ஏ.எஸ் கிரானைட் டைல்ஸ் கடையை நடத்தி வந்துள்ளார். இவரது கடை வியாபாரத்திற்காக தூத்துக்குடி சின்னமணி நகர் பகுதியில் வசிக்கும் ரத்தின சபாபதி மகன் அம்பிகை பாலன் என்பவரிடம் ரூபாய் 1,70,000 (ஒரு லட்சத்து 70 ஆயிரம்) 01/06/2020 அன்று கடன் பெற்றுள்ளார்.
பெற்றக் கடனுக்காக அருண்வேல் ரூ1,70,000-க்கான காசோலையை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என தெரியவந்துள்ளது.
இதனால், அருண்வேல் தன்னை ஏமாற்றும் நோக்கத்துடன் பணமில்லாத வங்கி காசோலையை கொடுத்ததை அறிந்த ரத்தின சபாபதி மகன் அம்பிகை பாலன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜலதி, அருண் வேலுக்கு 1 வருட கால சிறை தண்டனையும், ரூ2,08,250 (இரண்டு லட்சத்து எட்டாயிரத்து 250 ரூபாயை 1 மாதத்தில் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
3. மேலும் மற்றொரு செக் மோசடி வழக்கு:
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் அருண்வேல். இவர் தேவர்புரம் சாலையில் ஏ.எஸ் கிரானைட் டைல்ஸ் கடையை நடத்தி வந்துள்ளார். இவரது கடை வியாபாரத்திற்காக தூத்துக்குடி புஷ்பா நகர் பகுதியில் வசிக்கும் பூர்ணராஜன் மகன் பிரவீன் அந்தோணி ராஜ் என்பவரிடம் (3,50,000) ரூபாய் மூன்று லட்சத்து 50 ஆயிரம் 03/04/2020 அன்று கடன் பெற்றுள்ளார். பெற்றக் கடனுக்காக அருண்வேல் ரூ3,50,000-க்கான காசோலையை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என தெரியவந்துள்ளது.
இதனால், அருண் வேல் தன்னை ஏமாற்றும் நோக்கத்துடன் பணமில்லாத வங்கி காசோலையை கொடுத்ததை அறிந்த பிரவீன் அந்தோணி ராஜ் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜலதி, அருண் வேலுக்கு 1 வருட கால சிறை தண்டனையும், ரூபாய் (4,30,500) 4லட்சத்து 30 ஆயிரத்து 500யை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இந்த மூன்று வழக்குகளிலும் தூத்துக்குடி பிரபல வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் ஆஜராகி வாதத்தை நிறைவு செய்தார்.