
தூத்துக்குடியில் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற ரவுடி உட்பட 4 பேர் கைது – செல்போன் மீட்பு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று (15.01.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 செண்ட் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் மூர்த்தி (எ) மீரான் (23), தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்த முருகன் மகன் இசக்கி செல்வம் (26), தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த முருகன் மகன் சூரிய பிரகாஷ் (20) மற்றும் தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (எ) எபி (29) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அவரிடமிருந்த செல்போனை கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றதும் தெரிய வந்தது.
உடனே போலீசார் மூர்த்தி (எ) மீரான், இசக்கி செல்வம், சூரிய பிரகாஷ் மற்றும் மகேஷ்குமார் (எ) எபி ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 20,000/- மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மூர்த்தி (எ) மீரான் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், இசக்கி செல்வம் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 6 வழக்குகள் என 7 வழக்குகளும்,
சூரிய பிரகாஷ் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், மகேஷ் குமார் (எ) அபி மீது ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.