தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலகப் புற்றுநோய் தினம் சிறப்பாக அனுசரிப்பு.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலகப் புற்றுநோய் தினம் சிறப்பாக அனுசரிப்பு.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலகப் புற்றுநோய் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது‌ மருத்துவமனையின் முதல்வர் சிவக்குமார் உலகப் புற்றுநோய் தினம் குறித்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக புற்றுநோய் அறுவை சிகிச்சை மூத்த உதவி மருத்துவர் அமுதன் வரவேற்புரை வழங்கினார். புற்றுநோய் மருந்தியல் துறை மருத்துவர் காந்திமதி உலக புற்றுநோய் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். புற்றுநோய் கதிரியக்கத் துறையின் பேராசிரியர் மருத்துவர் லலிதா சுப்பிரமணியன் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தார்.

புற்றுநோயின் சிகிச்சை பெற்று மறுவாழ்வடைந்த நோயாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் கலைவாணி, பொது மருத்துவத்துறை பேராசிரியர் மருத்துவர் ராஜவேல் முருகன் பொது அறுவை சிகிச்சை துறையின் பேராசிரியர் மருத்துவர் ராகேஷ் பொன்னையா மற்றும் அனைத்துத் துறை உதவி மருத்துவர்கள் உதவி பேராசிரியர்கள்உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மருத்துவர் காந்திமதி நன்றி கூற, நாட்டுப் பன்னுடன் விழா நிறைவு பெற்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )